செய்திகள்
கோட்டூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே வாட்டார் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் அபிநயா(வயது23). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று அபிநயாவுக்கு வயிற்று வலி அதிகமானதால் அவர் வீட்டில் இருந்து களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா இறந்தார். இது குறித்து திருக்களார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.