செய்திகள்
மதிமுக மாவட்ட அவைத் தலைவர் மறைவு- வைகோ இரங்கல்
ம.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் நவநீத கிருஷ்ணன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினரும், வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான சு.நவநீத கிருஷ்ணன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார்.
என்னை உயிரினும் மேலாக நேசித்தார். இப்படி ஒரு துயர முடிவு ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரது மறைவினால் கண்ணீரில் துடி துடிக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழகக் கண்மணிகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியை வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.