செய்திகள்
தற்கொலை

மோகனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2020-11-01 14:40 GMT   |   Update On 2020-11-01 14:40 GMT
மோகனூர் அருகே குடும்ப தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள லத்துவாடியை சேர்ந்தவர் ஏகாம்பர மூர்த்தி (வயது 56). விவசாயி. இவர் குடும்பத்துடன் லத்துவாடி குடித்தெருவில் வசித்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஏகாம்பர மூர்த்தி கடந்த 29-ந் தேதி இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதுகுறித்து அவருடைய மகன் யோகேஷ் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News