செய்திகள்
விபத்து

கந்திலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- விவசாயி பலி

Published On 2020-10-31 08:44 GMT   |   Update On 2020-10-31 08:44 GMT
கந்திலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் எர்ரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50), விவசாயி. இவரது நண்பர் வெங்கடேஷ் (40). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கந்திலி அருகே உள்ள நரவந்தம்பட்டி கிராமத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்க்கு திரும்பினர். நத்தம் கூட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது.

இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ராமச்சந்திரன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News