செய்திகள்
கோப்பு படம்.

ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-10-29 09:27 GMT   |   Update On 2020-10-29 09:27 GMT
விபத்தில் அண்ணன் இறந்ததால் மனமுடைந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கொடைரோடு:

கொடைரோடு ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த கொடைரோடு ரெயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் வத்தலக்குண்டு அருகே உள்ள செங்கடாம்பட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் வினித் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் இவர், நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் வினித்தின் அண்ணன் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Tags:    

Similar News