செய்திகள்
விபத்து

திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி பலி

Published On 2020-10-28 12:19 GMT   |   Update On 2020-10-28 12:19 GMT
திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவேங்கடம்

திருவேங்கடம் அருகே சத்திர கொண்டான் கிராமத்தை சேர்ந்த சங்கையா மகன் ராமகிருஷ்ணன் (வயது 36). இவர் திருவேங்கடத்தை அடுத்து குண்டம்பட்டியில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து ஊருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் கலிங்கப்பட்டி அருகே மகாதேவர்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி மகன் செல்வம் (24) என்பவர் திருவேங்கடத்துக்கு வந்து கொண்டு இருந்தார். திருவேங்கடம்- சங்கரன்கோவில் சாலையில் உள்ள உமையதலைவன்பட்டியை அடுத்த டாஸ்மாக் கடை அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செல்வம் முதலுதவி சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News