செய்திகள்
கோப்புபடம்

ஸ்ரீரங்கம் இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய 3 பேர் கைது

Published On 2020-10-26 13:31 GMT   |   Update On 2020-10-26 13:31 GMT
ஸ்ரீரங்கம் கொள்ளிட கரையில் மணல் திருடிய 3 பேரை கைது செய்த போலீசார் மணல் கடத்த பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் கொள்ளிட கரையில் நேற்று அதிகாலை மணல் திருடுவதாக கிராம நிர்வாக அதிகாரி குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் 3 பேர் மணலை மூட்டையாக கட்டிக்கொண்டு வந்தனர். 

அவர்களை மடக்கிப்பிடித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருவானைக்காவல் தெப்பக்குளதெரு பகுதியில் வசிக்கும் நாகராஜன் (வயது 29), அவருடைய உறவினர்கள் சக்திவேல் (25) மற்றும் மணிகண்டன் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் கடத்த பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News