செய்திகள்
கோப்புபடம்

கே.கே.நகர் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி

Published On 2020-10-22 12:29 GMT   |   Update On 2020-10-22 12:29 GMT
கே.கே.நகர் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கே.கே.நகர்:

திருச்சி கீழ பஞ்சப்பூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 67). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பாட்டு கேட்பதற்காக ரேடியோ சுவிட்சை போட்டார். அப்போது மின்கசிவு காரணமாக அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். 

உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News