செய்திகள்
திருப்பத்தூரில் அஞ்சல்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து அஞ்சல் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் போனஸ் மற்றும் அகவிலைப்படி வழங்க கோரி திருப்பத்தூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்:
அனைத்து அஞ்சல் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் போனஸ் மற்றும் அகவிலைப்படி வழங்க கோரி திருப்பத்தூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். கே.வாதாபி, இளங்கோவன், கோட்ட செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர்.
கோட்ட செயலாளர் மனோகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.