செய்திகள்
மதுரை ஐகோர்ட்

டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் தரலாம்- மதுரை ஐகோர்ட்

Published On 2020-10-20 08:01 GMT   |   Update On 2020-10-20 11:33 GMT
டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் தரலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் தரலாம் என்றும், அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை காட்டிலும் இது சிறப்பாக இருக்கும் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News