செய்திகள்
கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது

Published On 2020-10-20 07:30 GMT   |   Update On 2020-10-20 07:30 GMT
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சின்னப்பன் (வயது 65) என்பவர் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து தாலுகா போலீசாரிடம் தனிப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். அதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் சின்னப்பனை கைது செய்தார். மேலும் எம்.ஜி.ஆர். நகரில் ஒரு வீட்டில் அவர் பதுக்கி வைத்திருந்த 5½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News