செய்திகள்
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 7 பேர் கைது
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 117 மதுபாட்டில்களையும், மதுவிற்பனை செய்து வைத்திருந்த ரூ.600-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 117 மதுபாட்டில்களையும், மதுவிற்பனை செய்து வைத்திருந்த ரூ.600-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.