செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்- 5 பேர் கைது

Published On 2020-10-13 09:12 GMT   |   Update On 2020-10-13 09:12 GMT
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் தாலுகா போலீசார் திருவள்ளூரை அடுத்த விடையூர் கூவம் ஆற்றின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்த மணவூர் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் (27) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல கனகம்மாசத்திரம் போலீசார் பூனிமாங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தியதாக பூனிமாங்காடு பகுதியை சேர்ந்த சுதாகர் (40), குமார் (45) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News