செய்திகள்
ஆத்தூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் முரளி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீதா (வயது 37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கீதா தனது குடும்ப செலவிற்காக அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கீதாவின் அக்காள் விஜயா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கீதா தூக்குப்போட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று கீதா இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.