செய்திகள்
விபத்து பலி

சேலம் அருகே லாரி மோதி காவலாளி பலி

Published On 2020-10-09 14:38 GMT   |   Update On 2020-10-09 14:38 GMT
சேலம் அருகே லாரி மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் வீராணம் அருகே உள்ள எம்.பாலப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 60). இவர் கொய்யா தோப்பு என்ற பகுதியில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சாயப்பட்டறைக்கு நூல் கண்டுகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது. பின்னர் நூல்கண்டு களை இறக்கிவிட்டு மினி லாரி பின்னோக்கி வந்தது. அப்போது காவலாளி வெற்றிவேல் சாயப்பட்டறை நுழைவு கேட்டை திறந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் வேகமாக பின்னோக்கி வந்த மினி லாரி காவலாளி வெற்றிவேல் மீது பயங்கரமாக மோதியது. இதில் கீழே விழுந்த அவருக்கு தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து தகவலறிந்த வீராணம் போலீசார் வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News