செய்திகள்
தற்கொலை

கெங்கவல்லி அருகே பஸ் டிரைவர் தற்கொலை

Published On 2020-10-07 12:52 GMT   |   Update On 2020-10-07 12:52 GMT
கெங்கவல்லி அருகே பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி ஊராட்சி வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் வெற்றிச்செல்வன் (வயது 33). இவர் ஆத்தூரில் உள்ள அரசு பணிமனையில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். ஆனால் வரன் கிடைக்காத விரக்தியில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News