செய்திகள்
அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக வழிகாட்டுதல் குழு: ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 6 பேர் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 5 பேர்

Published On 2020-10-07 06:55 GMT   |   Update On 2020-10-07 06:55 GMT
அதிமுக வழிகாட்டுதல் குழுவில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 6 பேரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 5 பேரும் இடம் பெற்று உள்ளனர்.
சென்னை:

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.  இன்று காலையிலும் ஆலோசனை நீடித்தது.

இந்நிலையில் காலை 10 மணியளவில் அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முறைப்படி அறிவித்தார். இதேபோல் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர்  தங்கமணி
அமைச்சர்  எஸ்.பி வேலுமணி
அமைச்சர்  ஜெயக்குமார்
அமைச்சர்  சி.வி.சண்முகம்
அமைச்சர்  காமராஜ்  
ஜேசிடி பிரபாகர் - முன்னாள் எம்.எல்.ஏ
மனோஜ் பாண்டியன்
பா மோகன் - முன்னாள் அமைச்சர்
ரா. கோபால கிருஷ்ணன்  முன்னாள் எம்.பி
கி மாணிக்கம் - சோழவந்தான் தொகுதி

இதில் 5 பேர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் இனிப்பு வழங்கியும் , பட்டாசு வெடித்தும் உற்சாகமாக  கொண்டாடி வருகின்றனர்.
Tags:    

Similar News