செய்திகள்
மடிக்கணினி-செல்போன் திருடிய வாலிபர் கைது
கரூர் அருகே மடிக்கணினி-செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 19). இவர் கரூரில் அறை எடுத்து தங்கி கோவைரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் சர்வராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் தனது அறையில் வைத்திருந்த மடிக்கணினி-செல்போன் ஆகியவை திடீரென காணாமல் போனது. இது குறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெகநாதன் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அதே ஓட்டலில் ஜெகநாதனுடன் பணிபுரிந்து வந்த மணவாடியை சேர்ந்த பாலகுமார் (21) என்பவர் மடிக்கணினி, செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பாலகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.