செய்திகள்
கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி பலி
பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன்(வயது 65). விவசாயியான இவர் நேற்று மாலை செல்லியம்பாளையத்தில் உள்ள ஒரு கிணற்றின் திட்டில் அமர்ந்திருந்தவர், தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி அழகப்பனின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.