செய்திகள்
மங்களமேடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
மங்களமேடு பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது.
மங்களமேடு:
மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லெப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, கலைம்பதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலையில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.