செய்திகள்
அபராதம்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

Published On 2020-10-04 05:42 GMT   |   Update On 2020-10-04 05:42 GMT
கிருஷ்ணராயபுரம் அருகே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்:

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பஸ்நிலையம், கடைவீதி, சேங்கல் சாலை, வடக்கு கேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, அதிகாரிகள் எடுத்து கூறினர்.
Tags:    

Similar News