செய்திகள்
கோப்பு படம்.

தொட்டியம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-10-02 12:50 GMT   |   Update On 2020-10-02 12:50 GMT
தொட்டியம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொட்டியம்:

தொட்டியம் அருகே உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பொய்யாமொழி. இவரது மகள் தனலட்சுமி (வயது 18). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 

இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News