செய்திகள்
தற்கொலை

சேலத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2020-09-30 10:22 GMT   |   Update On 2020-09-30 10:22 GMT
சேலத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் அழகாபுரம் அருகே உள்ள பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவருடைய மகன் விக்னேஷ் (வயது 22). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது வாலிபர் விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News