செய்திகள்
கைது

சமூக வலைதளத்தில் முதல்-அமைச்சர் பற்றி அவதூறு- வாலிபர் கைது

Published On 2020-09-28 08:05 GMT   |   Update On 2020-09-28 08:05 GMT
சமூக வலைதளத்தில் தமிழக முதல்-அமைச்சர் பற்றி அவதூறாக பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த சாமி என்பவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது முகநூலில் தமிழக முதல்-அமைச்சரை பற்றியும், அரசு அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றியும் அவதூறாகவும் வன்முறையை தூண்டும் விதமாகவும் யாரோ சிலர் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை மேற்கொண்டு சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய அதே பகுதியை சேர்ந்த முருகையா மகன் கார்த்திகேயன் (30) என்பவர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News