செய்திகள்
விபத்து பலி

சங்கரன்கோவில் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2020-09-27 12:09 GMT   |   Update On 2020-09-27 12:09 GMT
சங்கரன்கோவில் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

வீரகேரளம்புதூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் சங்கர் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் வழியாக கழுகுமலைக்கு சென்று கொண்டிருந்தார். சங்கரன்கோவில் பாட்டத்தூர் அருகில் சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சங்கரன்கோவில் டவுன் போலீசார் விரைந்து சென்று, சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News