செய்திகள்
ஆஸ்பத்திரியில் ஜூஸ், சூப் வகைகளை விரும்பி குடிக்கும் விஜயகாந்த்
கொரோனா தொற்று காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் ஜூஸ், சூப் வகைகளை விரும்பி குடிக்கிறார்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுசெயலாளர் விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா தொற்று ஆரம்ப அறிகுறியுடன் இருந்ததால் தற்போது அவர் நலமாகவும், ஆரோக்கியத்துடன் உள்ளார். விஜயகாந்த், ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் திட உணவுகளைவிட ஜூஸ், சூப் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் கேட்டு விரும்பி குடிக்கிறார். தொடர் சிகிச்சை அளிப்பதால் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.