செய்திகள்
கத்தியால் தன்னைதானே குத்தி வியாபாரி தற்கொலை
கல்பாக்கம் அருகே குடும்ப தகராறு காரணமாக வியாபாரி கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
கல்பாக்கம்:
கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அணுபுரம் பகுதி வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). காய்கறி வியாபாரி. இவருக்கு செல்வகனி (28) என்ற மனைவியும் பிரதாப் (9), நித்தீஸ் (3) என்ற 2 மகன்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்படட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் கத்தியால் தனது மார்பில் குத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனி சேகர், சதுரங்கப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.