செய்திகள்
கோப்புபடம்

திருச்செங்கோடு அருகே லாரி மோதி முதியவர் பலி - டிரைவர் கைது

Published On 2020-09-25 06:54 GMT   |   Update On 2020-09-25 06:54 GMT
திருச்செங்கோடு அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
எலச்சிப்பாளையம்:

திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி (வயது 85). இவர் அந்த பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை முதியவர் அர்த்தனாரி குமரமங்கலம் பகுதியில் திருச்செங்கோடு-நாமக்கல் சாலையை கடக்க முயன்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அர்த்தனாரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

 இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் அர்த்தனாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான எடப்பாடி ஆடையூர் பகுதியை சேர்ந்த சேட்டு (25) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News