செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2020-09-23 13:52 GMT   |   Update On 2020-09-23 13:52 GMT
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடுவூர்:

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள செருமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). இவரது தாயார் மல்லிகா (60) மற்றும் இவர்களுடைய உறவினர் பார்வதி (52). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை முடிந்து 3 பேரும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த அனைவரும் கொரோனா சிகிச்சை பெறுவதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீடு புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News