செய்திகள்
கோப்புபடம்

பரமத்தி அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-23 07:59 GMT   |   Update On 2020-09-23 07:59 GMT
பரமத்தி அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள பில்லூர் சீத்தக்காடு பகுதியில் ஒரு மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் தூக்கில் தொங்கியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மூர்த்திபட்டியை சேர்ந்த பிச்சமுத்து மகன் கதிர்வேல் (வயது 28) என்பதும், கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. 

மேலும் இவருக்கு திருமணமாகி ரம்யா (26) என்ற மனைவியும், மகேஷ் (4), யுகேஷ் (1) ஆகிய 2 மகன்கள் இருப்பதும் தெரிந்தது. தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கதிர்வேலுக்கும், ரம்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் கதிர்வேல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News