செய்திகள்
திருச்செங்கோட்டில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செங்கோட்டில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டு கூத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இந்துராஜ் (வயது 60). காவலாளி. இவருக்கு மல்லிகா (34) என்ற மனைவியும், விஷ்ணு (8) என்ற மகனும் உள்ளனர். இந்துராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்துராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்துராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.