செய்திகள்
விபத்து பலி

வாணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

Published On 2020-09-20 13:38 GMT   |   Update On 2020-09-20 13:38 GMT
வாணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம்:

வாணாபுரம் அருகே உள்ள நாச்சியானந்தல் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45), விவசாயி. அவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு 2 மகன்கன் உள்ளனர். நேற்று இரவு 8 மணி அளவில் ராஜா சைக்கிளில் கீழ்கச்சராப்பட்டு கூட்ரோடு அருகே செல்லும் போது, அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென ராஜா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News