செய்திகள்
சிப்காட் அருகே மயங்கி விழுந்து வேன் டிரைவர் பலி
சிப்காட் அருகே மயங்கி விழுந்து வேன் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):
திமிரி அருகே எம்.என்.பாளையத்தை அடுத்த அருந்ததியர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 60). இவர் சிப்காட் அருகே நெல்லிகுப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று பிற்பகல் தொழிற்சாலையில் இருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.