search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van driver death"

    பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த அய்யம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது25) இவர் ஓசூரில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் பொருட்களை ஏற்றி செல்லும் வேன் டிரைவராக இருந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தை அடுத்த திம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (25) இவர் ஓசூரில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்தார். தீபாவளி விடுமுறையையொட்டி நேற்று இரவு 2 பேரும் ஓசூரில் இருந்து கடத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    நள்ளிரவு 1 மணிக்கு பாலக்கோடு அருகே தருமபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்பூச்சி அங்காடி அருகே வரும்போது லாரி ஒன்று இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பலியானார். ஆனந்த் படுகாயத்துடன் கிருஷ்ணகியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நிற்காமல் சென்ற லாரியை  5 கிலோ மீட்டர் தூரம் போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
    ×