செய்திகள்
அபராதம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-09-18 12:44 GMT   |   Update On 2020-09-18 12:44 GMT
ஆறுமுகநேரி அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார், ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகராசன், காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மேற்பார்வையாளர் சுப்பிரமணியம், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கோபால் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆறுமுகநேரி பஜாரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் முககவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். முககவசம் அணிந்து கடைக்கு வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் என்றும், பொருட்கள் வாங்க வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி கடை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News