செய்திகள்
கோப்புபடம்

சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-17 14:31 GMT   |   Update On 2020-09-17 14:31 GMT
சீதாராம் யெச்சூரி மீது பொய் வழக்கு போட்டப்பட்டுள்ளதாக கூறி அதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி அதை கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நிர்வாகிகள் ராமமூர்த்தி, பிரவீன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சீதாராம் யெச்சூரி மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும், அந்த வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News