செய்திகள்
பல்லடம் அருகே சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது
பல்லடம் அருகே சாராய ஊறல் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தில் சாராய ஊறல் இருப்பதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் தலைமையிலான போலீசார் அய்யம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது செல்வம் (வயது 60) என்பவரது வீட்டில் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. இதையடுத்து செல்வத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.