செய்திகள்
சிவகாசி அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள மாரனேரி போடுரெட்டியப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30). டிராக்டர் டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுதா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வைரம் என்ற மகன் உள்ளார். சுரேஷ்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.