செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 31 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 31 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சாய்பாபா காலனி, ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 31 பேரை போலீசார் கைது செய்தனர்.