செய்திகள்
கைது

திருத்தங்கல் அருகே லாட்டரி விற்றவர் கைது

Published On 2020-09-05 13:37 GMT   |   Update On 2020-09-05 13:37 GMT
திருத்தங்கல் அருகே லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் செங்கமலநாச்சியார்புரம் பிள்ளையார் கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சாட்சியாபுரத்தை சேர்ந்த கணேசன் (வயது 38) என்பவர் தனது செல்போன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை ஆன்-லைன் வழியாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News