search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி விற்றவர் கைது"

    • போலீசார் நேற்று வண்டிச்சோலை பகுதியில் ரோந்து சென்றனர்.
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய வந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் நேற்று வண்டிச்சோலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் வண்டிச்சோலை பெல்லட்டி பகுதியை சேர்ந்த அருளேஸ்வரன் (வயது 34) என்பதும், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • லாட்டரி சீட்டுகளை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் அம்ஜத் (வயது 40).

    இவர் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வைத்துள்ள பெட்டிக்கடை யில் அரசால் தடை செய்யப்பட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஊத்தங்கரை போலீசார் அம்ஜத்தின் கடையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அம்ஜத்தை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.2,190 பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

    ×