search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lottery seller arrested"

    • போலீசார் நேற்று வண்டிச்சோலை பகுதியில் ரோந்து சென்றனர்.
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய வந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் நேற்று வண்டிச்சோலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் வண்டிச்சோலை பெல்லட்டி பகுதியை சேர்ந்த அருளேஸ்வரன் (வயது 34) என்பதும், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40).
    • சரவணன் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சரவணன் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், சரவணனை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்து 360 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×