செய்திகள்
கோப்புபடம்

மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-08-31 09:24 GMT   |   Update On 2020-08-31 09:24 GMT
கரூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:

கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன்நகரை சேர்ந்தவர் நைனாமுகமது. தையல் தொழிலாளி. இவருடைய மனைவி பேகம் (வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர்.

இதில் கல்லூரியில் படித்து வந்த அவர்களுடைய இளையமகள் ஜெய்தான்பீவி (19) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் மனம் உடைந்த பேகம் சோகத்துடன் காணப்பட்டார்.

இந்நிலையில் மகள் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த பேகம் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் விரைந்து சென்று, பேகத்தின் உடலை கைப்பற்றி கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News