செய்திகள்
கைது

மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2020-08-30 12:05 GMT   |   Update On 2020-08-30 12:05 GMT
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் சுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் தெற்கு தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, 3 மாட்டு வண்டிகளில் ராஜதுரை(வயது 31), கோபால் (29), முருகன் ஆகியோர் மணல் கடத்தி வந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு ஓட முயன்றனர். இதில் ராஜதுரை, கோபால் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News