செய்திகள்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

பாஜகவில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்கு பதிவு

Published On 2020-08-28 09:24 GMT   |   Update On 2020-08-28 09:24 GMT
பாஜகவில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை:

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 25ந்தேதி பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு கோவை மாவட்டம் சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, எஸ்.ஆர்.சேகர் உள்பட 5 பேர் மீது காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஊரடங்கு விதிகளை மீறி ஒன்று கூடுதல், நோய் பரப்பும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News