செய்திகள்
முதல்வர் பழனிசாமி

2021-22 ஆம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - முதல்வர் பழனிசாமி

Published On 2020-08-24 07:03 GMT   |   Update On 2020-08-24 07:03 GMT
2021-22 ஆம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சியின் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2021-22 ஆம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக தமிழகம் உள்ளது. அரசின் நடவடிக்கையால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். 
Tags:    

Similar News