செய்திகள்
மத்திய அரசு ஊழியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை
மத்திய அரசு ஊழியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 47). இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசின் என்ஜீன் பேக்டரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (42). இவர்களுக்கு 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உண்டு.
நேற்று காலை இவர் வேலைக்கு சென்ற நிலையில், பவித்ரா வீட்டை பூட்டிவிட்டு ஆன்லைன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மகனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பக்கத்து வீட்டுக்கு சென்றார். பின்னர் பவித்ரா சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டுக்கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 27 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 47). இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசின் என்ஜீன் பேக்டரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (42). இவர்களுக்கு 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உண்டு.
நேற்று காலை இவர் வேலைக்கு சென்ற நிலையில், பவித்ரா வீட்டை பூட்டிவிட்டு ஆன்லைன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மகனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பக்கத்து வீட்டுக்கு சென்றார். பின்னர் பவித்ரா சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டுக்கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 27 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.