செய்திகள்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
திருப்பூர்:
திருப்பூரில், தாராபுரம் ரோட்டில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் உறவினர்கள், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு வாழ வழியின்றி பொது இடங்களில் இருப்பவர்களை மீட்டு உரிய சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கும் வகையில் இந்த மையம் இயங்கி வருகிறது.
இந்த மையத்தில் தற்போது 50 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, கொரோனா காலத்திலும் சிறந்த முறையில் உணவுகள், மருத்துவ உதவிகள் செய்யப்படுவது குறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.