செய்திகள்
திருச்செங்கோட்டில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவா பவுண்டேசன் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை திருச்செங்கோடு தாசில்தார் பாஸ்கர் தொடங்கி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவா பவுண்டேசன் மேனேஜிங் டிரஸ்டி பூபாலன் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களுக்கு சித்த மருத்துவத்தின் கபசுர குடிநீர், ஆரோக்கிய உணவாக சுண்டல், முககவசம் ஆகியவை வினியோகம் செய்யப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவா பவுண்டேசன் உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டுதலின்படி கலந்து கொண்டனர்.