செய்திகள்
நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 58 பேர் கைது
நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 58 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தேவையின்றி சுற்றித் திரிபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கை மீறியதாக 58 பேர் கைது செய்யப்பட்டனர். 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.